Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி

EDITOR


மும்பை: காதல் திருமணம் செய்து கொண்ட காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப், விளையாட்டு உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் ஒன்றாகப் பயிற்சி பெற்ற இவர்கள், நீண்ட கால நண்பர்களாக இருந்து காதலித்து, 2018ல் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, 2015ல் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

அதேபோல், பருபள்ளி காஷ்யப்பும் 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இவர்களது திருமணம் இந்திய விளையாட்டு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆறு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக சாய்னா நேவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று உருக்கமாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, நானும் காஷ்யப்பும் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களுக்காகவும், ஒருவருக்கொருவராகவும் அமைதியை தேர்ந்தெடுக்கிறோம்.

இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், தனக்குக் கடுமையான மூட்டுவலி இருப்பதாகத் தெரிவித்திருந்த சாய்னா, தனது விளையாட்டு எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சாய்னாவின் பிரிவு குறித்து காஷ்யப் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

The post 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சோழவந்தான் அருகே தேவாலய சொத்தை தனிநபருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  • ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்காவும் சேர்ந்து மிரட்டுவதால் சவால்
  • சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
  • எம்.பி. பதவி: கமல்ஹாசனை வாழ்த்தி ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு
  • ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

You Might Also Like

சொந்த ஊரான தசவாராவில் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

July 15, 2025

மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி உபியில் 10 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடல்..? முதல்வர் யோகி நடவடிக்கையால் சர்ச்சை

July 15, 2025

சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், அனைத்து வரிகளும் சேர்த்து, ரூ.200க்கு மேல் இருக்கக்கூடாது: கர்நாடக அரசு உத்தரவு

July 16, 2025

கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவி சடலமாக மீட்பு

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?