டெல்லி: குருகிராம் நில வழக்கு தொடர்பாக ED தனக்கு சம்மன் அனுப்பியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். மக்களுக்கு நற்பணி செய்யும் போதெல்லாம் தன்னை முடக்க முயற்சிப்பதாகவும், தன்னிடம் மறைக்க ஏதுமில்லை என்பதால் விசாரணையை கண்டு பயமில்லை என்று ராபர்ட் வதேரா பேட்டியளித்தார். 20 ஆண்டுகளில் 15 முறை தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும் ஒவ்வொரு முறையும் 10 மணி நேரம் மேலாக விசாரணை நடத்துவதாகவும் ராபர்ட் வதேரா குற்றச்சாட்டியுள்ளார்.
The post ED தனக்கு சம்மன் அனுப்பியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ராபர்ட் வதேரா பேட்டி appeared first on Dinakaran.