ஹைதராபாத்: தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை இனி ஏடிஎம் மூலமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அமைப்பின் தெலங்கானா மண்டல அலுவலகம் மற்றும் ஹைதராபாத் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசிய மன்சுக் மாண்டவியா, "இனி வரும் நாட்களில் EPFO 3.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு வங்கியைப் போல மாறும். வங்கிகளில் மேற்கொள்வது போல அனைத்து பரிவர்த்தனைகளையும் நீங்கள் மேற்கொள்ள முடியும். உங்கள் (EPFO சந்தாதாரர்) யுஏஎன் (Universal Account Number) மூலம் பரிவர்த்தனை செய்யலாம்” என்று தெரிவித்தார்.