ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது. ரோஹித் சர்மா தலைமையில் இப்போது 2 ஐசிசி கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பைகளை ரோஹித் தலைமையில் வென்று தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் ரோஹித்.
2011 உலகக் கோப்பையை வென்ற பிறகே ஐசிசி தொடரில் இந்திய அணி அதிகம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்ற அணியில் நம்பர் 1 ஆக உள்ளது. ஆனால் இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவோ, இங்கிலாந்தோ, தென் ஆப்பிரிக்காவோ, பாகிஸ்தானோ கூட இல்லை என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.