தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக எனது 50-வது படம் இருக்கும் என்று சிம்பு உறுதியாக தெரிவித்துள்ளார்.
தனது 50-வது படத்தினை தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படம் தொடர்பாக சிம்பு, "எனது 50-வது படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால் தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் என்பது மிகவும் பெரியது. இப்போது ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால் தான் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்.