புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகள் பாறை போல உறுதியாக நின்று மத்திய அரசுக்கு ஆதரவை வழங்கின.