புதுடெல்லி: 2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 மடங்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
ஐஐடி மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் ராம்சங்கரன் தலைமையில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வாசு சத்யகுமார் மற்றும் ஸ்ரீதரன் கௌதம் ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். 2015 முதல் 2019 வரையிலான இந்த 5 ஆண்டு காலத்தில் வனப்பரப்பு மாற்றங்களை மதிப்பிடுவதற்கு கோபர்நிகஸ் குளோபல் லேண்ட் சர்வீஸ் (சிஜிஎல்எஸ்) டிஜிட்டல் வனப்பரப்பு வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டது.