Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார்

EDITOR


லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து வருகிறார். அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாளில், தனது வீட்டுக்கு வருமாறு இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு அந்த சிறுமி அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லை. சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டதும் நண்பன் வந்துவிட்டான் என நினைத்து கதவை திறந்தார். மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மாணவியின் நண்பனுடன் மேலும் 3 சிறுவர்கள், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 4 பேரும் வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த மாணவியின் தாய் வீடு திரும்பினார். மகள் இருந்த நிலையை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே மகளை வெளியே இழுத்து வந்தார். பின்னர் அந்த 4 சிறுவர்களையும் அதே அறையில் வைத்து பூட்டிவிட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த விவகாரம் அந்த குடியிருப்பில் உள்ள சிலருக்கும் தெரியவந்தது.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது வெளியே தெரியவந்தால் குடியிருப்பின் மதிப்பு கெட்டுவிடும் என்று கருதிய அந்த குடியிருப்பின் சங்க நிர்வாகிகள் சிலர், போலீசார் வருவதற்குள், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களையும் வெளியேற்றினர். இருப்பினும் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை, கவிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரில் 3 பேர் மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • மதமாற்றத்தில் சாங்குர் பாபா கும்பலுக்கு தமிழகத்துடன் தொடர்பு: சென்னை வருகிறது உத்தர பிரதேச மாநில ஏடிஎஸ் படை
  • ஜம்மு – காஷ்மீரில் தீவிர சோதனை: தீவிரவாதிகளுக்கு உதவிய 10 பேர் கைது
  • அரை இறுதியில் அர்ஜுன் எரிகைசி தோல்வி!
  • எம்சிசி-முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல்
  • மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே ஷுப்மன் கில்லின் பாதையை வரையறுக்கும்: சொல்கிறார் கிரேக் சேப்பல்
  • கெங்கிஸ் கான் மங்கோலிய சாம்ராஜ்யத்தை கட்டமைக்க வித்திட்ட மனைவியின் ஆலோசனைகள்

You Might Also Like

சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், அனைத்து வரிகளும் சேர்த்து, ரூ.200க்கு மேல் இருக்கக்கூடாது: கர்நாடக அரசு உத்தரவு

July 16, 2025

மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் உயிரிழந்த விவகாரம்: தப்பி ஓடியவர் கைது

July 16, 2025

தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்..!!

July 17, 2025

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு தேதி அறிவிப்பு!

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?