கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்ற 37 வயதுப் பெண் தன்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தி அதிமுக-வினர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
‘‘எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் நான் பிறந்தேன். சூழ்நிலை காரணமாக கேரளாவில் ரகசியமாக வாழ வேண்டியதாகி விட்டது. அவ்வப்போது போயஸ் தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயார்’’ என்றெல்லாம் அவர் மனுவில் கூறியிருப்பது நம்பகத்தன்மைக்கு உரியதாக இல்லை. இருந்தாலும் வழக்கு என்று வந்துவிட்டால் நீதிமன்றங்கள் உரிய ஆவணங்களைப் பரிசீலித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்ட பிறகே தீர்ப்பளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.