புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனில் பிரஜ் ஹோலி கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ம் தேதி ஹோலி பண்டிகை தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உள்ளூர் முஸ்லிம்களும் பங்கேற்பது வழக்கம். இதற்கு தடை விதிக்க உ.பி.பாஜக எம்எல்ஏ.வும், இந்துத்துவா அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மதுரா பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி கூறும்போது, “இந்து பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சமூக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. எங்கள் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பதன் மூலம், அவர்கள் ‘காதல் ஜிஹாத்’ மற்றும் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், முஸ்லிம்கள் இந்து பண்டிகைகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.