புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு கூட்டாண்மைக்கு இந்த சந்திப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.