‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் இளைஞர்கள் கோபி – சுதாகர் இருவரும் சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அன்றாடம் மக்கள் சந்திக்கும் இன்னல்களை நகைச்சுவை காணொலியாக தயாரித்து, அந்தந்த பாத்திரங்களைப் போலவே நடித்து அதன்மூலம் சமூக கருத்துகளை நாசூக்காக தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு காணொலியும் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுமக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக அமைந்து வருகிறது. மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் கருத்துகளையும் அவர்கள் தங்கள் காணொலியில் இழையோடச் செய்வதால், அதைப் பார்ப்பவர்கள் மத்தியில் சமூக மாற்றம் ஏற்பட வழிவகுத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.