கிளாம்பாக்கம் பேருந்து முனைய வாகன வளாகத்தில் பயணிகள் பாதுகாப்புக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, முனையத்தின் வாகன நிறுத்துமிடம், நடைமேடைகள், முதல் தளம், பிரதான கட்டிடம், மாநகர போக்குவரத்து கழக பகுதி என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பிரத்தியேகமான கண்காணிப்பு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.