கோழிக்கோடு : கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் எரியும் தீயை அணைக்க 3ஆம் நாளாக வீரர்கள் போராடி வருகின்றனர்.1,754 கண்டெய்னர்களுடன் உள்ள கப்பல் தீப்பற்றி எரிந்து வந்தாலும் இதுவரை மூழ்கவில்லை. கப்பலின் மேற்புரம் 671 கண்டெய்னர்களும், அடிப்புறம் 1,083 கண்டெய்னர்களும் உள்ளன. 2 ஆயிரம் டன் எண்ணெய், 240 டன் டீசல் உள்ளதால் தீ பரவி கப்பல் முழுமையாக எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் எரியும் தீயை அணைக்க 3ம் நாளாக போராட்டம் appeared first on Dinakaran.