சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு இன்று தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர்.