மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினர் 11,200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாத விவகாரத்தை மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முன்தினம் எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள் ஆகிய வார்த்தைகளை தமிழக எம்பிக்களை நோக்கி பயன்படுத்தினார். இதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்ததோடு உரிமை மீறல் பிரச்சினையையும் கொண்டு வந்தார்.