பாலக்காடு: திருச்சூர் அருகே ஆயில் குடோனுக்கு தீ வைத்த மாஜி ஊழியரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த பூந்தோள் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு சொந்ததமான ஆயில் குடோன் வேளங்கோடு பகுதியில் உள்ளது. இங்கு எளவள்ளியைச் சேர்ந்த டிட்டோ தாமஸ் (36) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் செயல்பாடு சரியில்லாததால், ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் டிட்டோ தாமசை பணியில் இருந்து நீக்கினார்.
இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த டிட்டோ தாமஸ் ஆயில் குடேனுக்கு நேற்று அதிகாலை தீ வைத்து விட்டு பேரமங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த தீ விபத்தில் ரூ.3.50 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து பேரமங்கலம் போலீசார் டிட்டோ தாமஸ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அதிகாலை நேரம் என்பதால், குடோனில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை.
The post திருச்சூர் அருகே ஆயில் குடோன் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.