டெல்லியில் 6 வயது சிறுமி நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இதில் 2 மாதங்களுக்குள் டெல்லியில் நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்க வேண்டும். பிடிக்கப்படும் நாய்களை அடைக்கவும், இனவிருத்தியை கட்டுப்படுத்தும் ஊசி செலுத்தவும் உரிய வசதிகளுடன் கூடிய காப்பகங்களை உடனே உருவாக்க வேண்டும்.
சுமார் 5,000 நாய்களை அடைக்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நாய்களைப் பிடிப்பதற்கான சிறப்பு படையை உருவாக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தெரு நாய்கள் தொல்லை என்பது டில்லிக்கு மட்டும் உள்ள பிரச்சினையல்ல. நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக கூறி, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.