ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப்பயணிகள் 28 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் 2 பேரை ராணுவம் அடையாளம் கண்டது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்தவன் ஆஷிப் ஷேக் என தகவல் வெளியாகியது. ஆஷிப் ஷேக், அடில் கவ்ரி ஆகிய இரண்டு தீவிரவாதிகளும் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான தீவிரவாதிகள் இரண்டு பேரை ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.
The post பகல்காம் தாக்குதல்: தலைமறைவான 2 தீவிரவாதிகளை தேடுகிறது ராணுவம் appeared first on Dinakaran.