புதுடெல்லி: மகளிர் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில், இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த முதல்வர் ரேகா குப்தா, ‘மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த எங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும். இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்’ என தெரிவித்தார்.
The post பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு டெல்லியில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500: அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.