பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஒருபோதும் தானாக முன்வந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், ஒருநாள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று நான் நம்புகிறேன்.