இந்தியா: பாக். போர்ப் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது. போர்ப்பதற்றம் காரணமாக மே 15 வரை 32 விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. தாக்குதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக போர் பதற்றக் காரணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடப்பட்ட விமான நிலையங்களில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 மே 2025 அன்று வரை 32 விமான நிலையங்களை சிவில் விமான நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடுவதற்கான குறிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விமான நிலையங்கள் இப்போது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிவில் விமான நடவடிக்கைகளுக்குக் கிடைக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
The post பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு appeared first on Dinakaran.