புதுடெல்லி: தமிழ்நாட்டில் கார் பந்தயம் நடத்த தடையில்லை என்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், இதில் கார் பந்தயத்திற்காக தமிழ்நாடு அரசு செய்த ரூ. 42 கோடி செலவை, அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள ரேசிங் பிரோமோசன் பிரைவேட் லிமிடட், தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பார்முலா 4 பந்தயம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் கார் பந்தயத்திற்காக தமிழ்நாடு அரசு செய்த ரூ. 42 கோடி செலவை, அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள ரேசிங் பிரோமோசன் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நிறுவனம் உட்பட மொத்தம் நான்கு பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. கார் பந்தயத்திற்காக தமிழ்நாடு அரசு செய்த ரூ.42 கோடி செலவை, அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள ரேசிங் பிரோமோசன் பிரைவேட் லிமிடட் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு ரத்து செய்கிறோம். இதில் கார் பந்தயம் நடத்துவது என்பது மாநில அரசின் உரிமை என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று உத்தரவிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் எதிர்வரும் காலங்களில் கார் பந்தயம் நடத்த எந்தவித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
The post மாநில அரசின் உரிமையில் தலையிட முடியாது; தமிழ்நாட்டில் கார் பந்தயம் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.