புதுடெல்லி: மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்ளிட்டோருக்கு சவாலாக இருந்தவர் அருண் காவ்லி (76). இவர் தனது ஆதரவாளர்களால் ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் வசித்த மும்பை, பைகுல்லா பகுதியின் தக்டி சாலை இவரது கோட்டையாக இருந்தது. ஓர் எளிய மராத்தி குடும்பத்திலிருந்து உயர்ந்து மும்பை தாதாக்கள் உலகில் கொடிகட்டிப் பறந்த காவ்லியின் வாழ்க்கை திரைப்படக்கதைகள் போல் உள்ளது.