புதுடெல்லி: வருமான வரித்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆடம்பர பொருள்களுக்கான டிசிஎஸ்கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கை கடிகாரம், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பழங்கால பொருள்கள் போன்ற கலைப்பொருள்கள், நாணயங்கள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்ட சேகரிக்க கூடிய பொருள்கள், கைப்பைகள், விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள், சன் கிளாஸ்கள், உயர்ரக காலணிகள், ஹோம் தியேட்டர் அமைப்புகள் உள்பட ரூ.10 லட்சத்துக்கும் மேல் விலை மதிப்புடைய பொருள்கள் வாங்கும்போது நேற்று முன்தினம்(ஏப்.22) முதல் மூலத்தில் வசூலிக்கப்படும் 1 சதவீத வரி விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட ஆடம்பர பொருள் வாங்கினால் 1 சதவீத வரி பிடித்தம் appeared first on Dinakaran.