பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் நிறைவேறி இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் புதிய வக்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக நீடிப்பதையே காட்டுகிறது.