டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் போது நடந்த பிரசாரங்களில் பங்கேற்றவர்கள் சேர்ந்து தேசிய குடிமக்கள் கட்சி என்னும் புதிய கட்சியை நேற்று தொடங்கினர். இதில் நாடு முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கட்சிக்கு முகமது யூனுஸ் ஆசி வழங்கி உள்ளார் என தகவல் வந்துள்ளன. இதற்கிடையே,வரும் டிசம்பர் மாதம் நாட்டில் பொது தேர்தல் நடக்க உள்ளது. புதிய கட்சிக்கு முகமது யூனுஸ் ஆதரவு அளித்துள்ளதால் வரும் தேர்தல் நடுநிலையோடு நடக்குமா என்று எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி சந்தேகம் கிளப்பியுள்ளது.
The post வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் புதிய கட்சி தொடக்கம் appeared first on Dinakaran.