புதுக்கோட்டை: வடகாட்டில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகாடு வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுக்கோட்டை போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அறிவித்துள்ளார். வடகாட்டில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமை கட்டுக்குள் வரும்வரை வடகாடு வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வடகாடு வன்முறை: பேருந்துகள் நிறுத்தம் appeared first on Dinakaran.