பாரதிய கிசான் சங்கம் என்ற அமைப்பு நாக்பூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில், ‘‘இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களிலும் மரபணு மாற்றம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய பயிர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் ரசாயன பொருட்களின் தர அளவை நிர்ணயிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத்துறை அதைச் செய்ய தவறி வருகிறது.
அல்சைமர், புற்றுநோய், தோல்நோய், சுவாச கோளாறு போன்றவற்றிற்கு ரசாயனம் கலக்கப்பட்ட விவசாயப் பொருட்களே முக்கிய காரணம் என்பதை பொது சுகாதாரத்துறை அமைச்சகமும், உணவு மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க மக்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவாக பசு அடிப்படையிலான இயற்கை பொருட்கள் சார்ந்த வேளாண் உற்பத்தி பொருட்களையே அனுமதிக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.