உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரளி கிராமத்தில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டு 20 கட்டிடங்கள் இடிந்ததற்கு, மிகப் பெரியளவில் ஏற்பட்ட பனிச்சரிவே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டத்தின் கங்கோத்ரி அருகில் உள்ள தரளி கிராமத்தில் திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு மேக வெடிப்பு காரணம் என கூறப்பட்டது.