
பழநி: கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானல் வனப் பகுதியில் அரியவகை மூலிகை கள், குங்குலியம், சில்வர் ஓக், ரோஸ் உட், வேங்கை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், அதற்கு நேர் மாறாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் சமீபகாலமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற்று, அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்தும் மரங்களை வெட்டி வருகின்றனர். அவ்வாறு வெட்டிய மரங்களை சாலையோரம், பட்டா நிலம் மற்றும் வனப்பகுதிக்கு உள்ளே பதுக்கி வைக்கின்றனர்.

