தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரையிலான இந்த கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்து 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர்.
இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை மற்றும் போலீஸார் என 9 படைகளின் வீரர்கள் இரவும், பகலுமாக போராடி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 13.85 கி.மீட்டர் தொலைவு வரை உள்ள சுரங்கப்பாதையில் 13.61 கி.மீ. வரை மீட்புப் படை வீரர்கள் முன்னேறி உள்ளனர். வழி நெடுகிலும் சேறும் சகதியுமாக உள்ளது.