டெல்லி : வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை குறைக்க கோரியும், புதிய நிபுணர் குழு மூலம் அணையை மறு ஆய்வு நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் பிப்ரவரி 12ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறையீட்டை ஏற்று ஏற்கனவே நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்குடன் இணைத்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post முல்லைப் பெரியாறு அணை வழக்கு : பிப்ரவரி 12ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை!! appeared first on Dinakaran.