
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறிஉள்ளதாகவும், மின் கட்டமைப்பு அதிக கார்பன் அடர்த்தியானதாக மாறியுள்ளதாகவும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் கிரிஷ் பால்வே தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.ஹெச் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் நிலையான எரிசக்தி மாற்றம் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. ‘பசுமைப் பொறியியலின் ஈடுபாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் கிரிஷ் பால்வே பங்கேற்று உரையாற்றினார்.

