புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்வி முறை இந்தியாவுக்குத் தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின் அடித்தளம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெரு நாட்டின் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சிலி பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் உரையாடியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது