திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் என்ஜின் டிரைவர்களை பரிசோதித்தபோது அவர்கள் மது அருந்தியுள்ளதாக முடிவு வந்தது. ரத்த பரிசோதனை செய்தபோது ஆல்கஹால் இல்லை என தெரியவந்தது. இன்ஜின் டிரைவர்களில் சிலர் இளநீரோ, ஹோமியோ மருந்தோ அல்லது சில பழ வகைகளையோ சாப்பிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வருவதற்கு முன் இளநீர், ஹோமியோ மருந்து மற்றும் சில பழ வகைகளை சாப்பிடக்கூடாது என்று திருவனந்தபுரம் கோட்ட எலக்ட்ரிக்கல் பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
The post ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் சாப்பிட தடையா? திருவனந்தபுரம் கோட்ட உத்தரவால் சர்ச்சை appeared first on Dinakaran.