இந்தியா

இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் | உற்சாக வரவேற்பு முதல் அதானி சந்திப்பு வரை – அண்மைத் தகவல்கள்

அகமதாபாத்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

அதானியுடன் சந்திப்பு: இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று வியாழக்கிழமை காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றார். நாளை அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இதற்கிடையில் அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை போரிஸ் ஜான்சன் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து, கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத் தலைமையகத்திற்கு வருகை தந்திருக்கும் முதல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனும் இணைந்து பசுமை ஹெச்2 மற்றும் புதுப்பிக்கத்தக்க புதிய ஆற்றல்களில் கவனம் செலுத்துவதன் மூலம், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை கொள்கையை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை இருநாடுகளும் இணைந்து உருவாக்க பிரிட்டிஷ் நிறுனங்களுடன் சேர்ந்து பணிபுரிய இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *