தமிழ்நாடு, வானிலை

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 5 நாட்கள் ஜில் மழை – வானிலையின் கூல் அறிவிப்பு

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் வரும் 6ஆம் தேதி ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோடை மழை என்றாலே வெயிலுக்கு இதமாய் இருக்கும். சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக இடியும் மின்னலுமாய் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் – பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு மிதமான மழை இன்றும் நாளையும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி மின்னலுடன் மழை 06.04.2022: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்யாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *