தமிழ்நாடு

“தமிழ் தான் இணைப்பு மொழி..!” அமித் ஷாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் நெத்தியடி பதில்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கருப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

இந்தியாவுக்கு இந்திதான் இணைப்பு மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு ஒற்றை வரியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துவிட்டு சென்றார்.

இந்தி மொழி எதிர்ப்பு

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அமித்ஷாவின் இற்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கருப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்நிலையில், சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ரஹ்மானை கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், நான் சில கருத்துக்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். ஏழு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றிருந்த போது சந்தித்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் இந்தியரா, எனக்கு வட இந்தியர்களை மிகவும் பிடிக்கும், அவர்களின் படங்கள் மிகவும் அருமையாகவும், வடஇந்தியர்களும் அழகாகவும் இருப்பார்கள் என்றார்.

தமிழ்தான் இணைப்பு மொழி

அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னை மிகவும் பாதித்தது. மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தை, கவுரவத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் வண்ணத்தை விரும்புகிறோம். நாம் அதை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் நம்முடைய படங்களை பார்க்கும் போது தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும். அப்படி படம் எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம் இந்தி தான் இணைப்பு மொழி என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “தமிழ்தான் இணைப்பு மொழி” என கூலாக பதிலளித்து விட்டு தனது காரில் ஏறிச்சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *