இந்தியா, விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்.. பாஜகவின் குட்டை அம்பலப்படுத்தும் KS.அழகிரி.!

மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றுச் சொன்னால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதை நிதியமைச்சர் புரிந்து கொள்ளாமல் மாநில அரசுகள் மீது பழி போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்;- ஒன்றிய பா.ஜ.க. அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது கூட பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரி விதித்து கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி ரூபாய் வருவாயை பெருக்கிக் கொண்டது. இதனால், சமீபகாலமாக பணவீக்கம் 95 மாத உயர்வாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. உணவு பணவீக்கம் 8.38 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *